Pages

Powered by Blogger.

காத்துக்கொண்டிருக்கிறேன்

காத்துக்கொண்டிருக்கிறேன் 


___________________________________
அடர் மழை குறைந்து
தூவும் தூவானத்திடை
பழைய காதலொன்றை
ஆர்ப்பாட்டமாய் ஆலாபிக்கிறாய் 
ஆறி விட்ட தேநீர் கோப்பை
அவசரமாய் மீண்டும் சூடேறுகிறது
எவ்வளவோ முயன்றும் என்னுள்
புதைந்த நேச முகம்
முகவரி மறந்துவிட்டது
நினைவடுக்குகளின் நீள்தேடலில்
நானிருக்கையில்
முன்னுன் மனங்கவர்ந்தவளின்
காதோர தேமலை
வர்ணித்துக்கொண்டிருந்தாய்
காதலை கசியவிடும்
ஜாடை பார்வை கண்டு நான்
உருகி நிற்கையில்
உன்னவளுடன் தேரேறி
பறந்து விட்டாய்
தேடலின் நிறைவில் பெற்ற உன்
காதல் கண்களை சுமந்தபடி
நீ விட்டு சென்ற இடத்திலேயே
காத்துக்கொண்டிருக்கிறேன் நான் .

0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll