Pages

Powered by Blogger.

இந்த கவிதை ....போல




இந்த கவிதை ....போல 


அதோ அங்கே இருக்கிறாய் 
என்னை விட்டு தள்ளி 
தூரமாக , 
என் விருப்பத்தின் ஆரம்பமாக 
வெறுப்பின் முடிவாக , 
என் உள்ளங்கை வெப்பம் 
தர முடியா தொலைவில் ,
பரிவான பார்வையோடு கூடிய  மன்னிப்பிற்கு எட்டாமல் , 
கோபம் தீர ஒரு சண்டைக்கு 
வாய்ப்பளிக்காமல் , 
சாதுர்யமான சமாதானங்களுக்கு 
சாத்தியமற்ற நிலையில் , 
அதோ ......இருக்கிறாய் ....
தள்ளி ....தூரமாக ...தொலைவாக 
இருந்தும் , 
கை நீட்டினால் உன்னை 
தொட்டுவிடுவேனெனதான் 
சில சமிக்ஞைகள்
எனக்கு உரைக்கின்றன , 
இடை தூர நிலங்களை 
நிரப்பட்டும் உன் 
விருப்( ப )பூக்கள் ,
கண்ணால் காண முடியாதது 
இந்த அன்பு , 
கடவுளை போல ...
நிறுத்தவே முடியாதது காதல் 
இந்த கவிதையை போல .




0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll