இந்த கவிதை ....போல
என்னை விட்டு தள்ளி
தூரமாக ,
என் விருப்பத்தின் ஆரம்பமாக
வெறுப்பின் முடிவாக ,
என் உள்ளங்கை வெப்பம்
தர முடியா தொலைவில் ,
பரிவான பார்வையோடு கூடிய மன்னிப்பிற்கு எட்டாமல் ,
கோபம் தீர ஒரு சண்டைக்கு
வாய்ப்பளிக்காமல் ,
சாதுர்யமான சமாதானங்களுக்கு
சாத்தியமற்ற நிலையில் ,
அதோ ......இருக்கிறாய் ....
தள்ளி ....தூரமாக ...தொலைவாக
இருந்தும் ,
கை நீட்டினால் உன்னை
தொட்டுவிடுவேனெனதான்
சில சமிக்ஞைகள்
எனக்கு உரைக்கின்றன ,
இடை தூர நிலங்களை
நிரப்பட்டும் உன்
விருப்( ப )பூக்கள் ,
கண்ணால் காண முடியாதது
இந்த அன்பு ,
கடவுளை போல ...
நிறுத்தவே முடியாதது காதல்
இந்த கவிதையை போல .
0 comments:
Post a Comment