எரியும் பகல்கள்
___________________
முன்பு போல் ஒவ்வொரு கவளத்தையும்
ரசித்து உண்பதில்லை நீ
உப்போ உரைப்போ
எதுவோ ஒன்று குறைந்து விடுகிறது
உணவிலோ அல்லது என்னிலோ
காய்ந்த கைகளுடன் கதைத்தது
பெரும்பாலும் அர்த்தமற்றவையையே உருகிய நம் இரவுகள்
பகலில் எரிகின்றன
பேசும் வகையற்று
புதைந்து விட்ட சொற்கள்
வெளியை வெறிக்கின்றன
நீயும் ...
உணவில் இடறிய கறிவேப்பிலையை
வீசி எறிகிறாய்
அல்லது என்னையா ...
0 comments:
Post a Comment