Pages

Powered by Blogger.

எரியும் பகல்கள்

    எரியும் பகல்கள்



___________________
முன்பு போல் ஒவ்வொரு கவளத்தையும்
ரசித்து உண்பதில்லை நீ
உப்போ உரைப்போ
எதுவோ ஒன்று குறைந்து விடுகிறது 
உணவிலோ அல்லது என்னிலோ
காய்ந்த கைகளுடன் கதைத்தது
பெரும்பாலும் அர்த்தமற்றவையையே உருகிய நம் இரவுகள்
பகலில் எரிகின்றன
பேசும் வகையற்று
புதைந்து விட்ட சொற்கள்
வெளியை வெறிக்கின்றன
நீயும் ...
உணவில் இடறிய கறிவேப்பிலையை
வீசி எறிகிறாய்
அல்லது என்னையா ...


0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll