Pages

Powered by Blogger.

சூரியக்கனவுகள்

  சூரியக்கனவுகள்


____________________
திடீரென்று ஓர் நாள் எனக்கு 
நினைவு வந்ததது 
எதிர் வீட்டு குழந்தை தனது பிறந்தநாளுக்காய்
இனிப்பு வழங்கியபோது
லட்சியமென்று முன்பெல்லாம்
சொல்லித்திரிந்த
என் வாழ்நாள் கனவு
அப்போதெல்லாம்
என் வானில் சூரியனாய்
ஜொலித்துக்கொண்டிருந்தது
இன்று
என் மீதெல்லாம் கருமை பரவ
கறுப்பியாக திரிகிறேன் நான்
என் சூரிய ஒளியை மறைத்து
சுவரொன்று வளர்ந்ததால்
இப்பொழுது
சட்டென்று வெளியேறிய ஒளியை
உள்ளங்கை ஏந்தியபடி
செய்வதறியாது இன்னும்
கறுத்துக்கொண்டிருக்கிறேன் 


0 comments:

Post a Comment

Blogger News

வணக்கம் தோழமைகளே , எனது " வா என் வண்ண நிலவே " கதைக்கு நீங்கள் அளித்த ஆதரவிற்கு மிக்க நன்றி. இதோ உங்கள் முன் எனது அடுத்த கதை " வானவில் தேவதை " கறுப்பென்பது பிழையல்ல .மனமிருப்பின் வரமே என்பதனை என் முதல் கதையில் கூறியிருந்தேன். சொந்தங்கள் இல்லாத வாழ்வு வாழ்வல்ல.சந்தர்ப்ப சூழ்நிலைகளே சொந்தங்களின் பாசத்தை மறைக்கிறது என்பதனை இரண்டாவது கதையில் கூறியிருக்கிறேன் காதல் கலந்து.படித்து பாருங்கள்.
 

Blogger news

Blogroll